இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

26 Feb, 2024 | 06:00 PM
image

இலக்கியத்துறையில் முத்திரை பதித்த மற்றும் இலைமறைக்காய்களாக இருக்கும் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் “உலகம் முழுவதும் எங்கள் கதைகள்” சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கல்முனை ஆஸாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் “பென் கிளப்” தலைவி எழுத்தாளர் சித்தி மசூறா சுஹூர்த்தீன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (22) நடைபெற்றது.

ஆற்றலும் ஆளுமையும் மிக்க “இலங்கை பென் கிளப்” (Pen Club) உறுப்பினர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட இந்த சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வியும் ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் தலைவியும் அவுஸ்திரேலியா நாட்டின் முஸ்லிம் பெண்கள் கவுன்சில் தலைவியுமான சட்டத்தரணி மரியம் நளிமுத்தீன் கலந்துகொண்டார்.

இதில் மரியம் நளீமுத்தினின் கணவர் கவிஞர் டொக்டர் நளிமுத்தீன் சிஹாப்தீன், பிரதி கல்வி பணிப்பாளர் ஜிஹானா ஆலிப், இணைப்பாளர் மிப்ராஸ் மன்சூர் உட்பட பெண் எழுத்தாளர்கள், இலக்கிய படைப்பாளிகள், பெண் கிளப் நிர்வாக அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.  

இதன்போது  பிரதம அதிதி பெண் ஆளுமை மரியம் நளிமுத்தீன் இலங்கை பெண் கிளப் அங்கத்தவர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57