யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை தினம் இன்று திங்கட்கிழமை (26) அனுட்டிக்கப்பட்டது.
கலாசாலையின் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசாலையின் முன்றிலில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. விரிவுரையாளர்களும் ஆசிரிய மாணவர்களும் மலர் வழிபாடு மேற்கொண்டனர்.
திருவள்ளுவர் குறித்தும் திருக்குறள் குறித்தும் ஆசிரிய மாணவர்களின் சிற்றுரைகள் இடம்பெற்றன. உரைகளை ஆற்றிய ஆசிரிய மாணவர்களுக்கு புத்தக பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இப்பரிசில்களை கலாசாலையின் மூத்த விரிவுரையாளர் மு.ஜெயக்குமாரி வழங்கினார்.
திருவள்ளுவர் குருபூசை மாசி மாத உத்திர நட்சத்திர நாளில் அனுஷ்டிக்கப்படுவது வழக்கமாகும். திருவள்ளுவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் பிறந்து மாசி மாத உத்தர நட்சத்திரத்தில் பூரணமடைந்தார் என்பது தமிழ் அறிஞர்களின் நம்பிக்கையாகும். திரு வி.க., தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் போன்றோர் இக்கருத்தை வழிமொழிந்துள்ளனர்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் தினமும் ஆரம்பிக்கப்படுவது பன்னெடுங்காலமாக வழக்கமாக உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM