வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று வெப்பம் அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்கூறினார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,
வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று வெப்பம் அதிகரித்துக் காணப்படும். இதனை வெப்பச் சுட்டெண் என்று அழைக்கப்படும். ஆனால் அதிகரித்த வெப்ப நிலையாக கொள்ளமுடியாது.
அதாவது மனித உடலினால் உணரப்படுகின்ற இந்த வெப்ப நிலையானது ஈரப்பதனுக்கும் அதிகூடிய வெப்ப நிலைக்கும் இடையிலான தொடர்பாகும்.
இவ்வாறான வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றபோது, வெளியிடங்களில் வேலைசெய்யும் மக்கள் நிழல் சார்ந்த இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் நோயாளிகளை அடிக்கடி கவனத்தில் கொள்ள வேண்டும். திறந்த வாகனங்களில் பிள்ளைகளை வெளியில் கூட்டிச்செல்ல வேண்டாம். அடிக்கடி நீராகாரம் பருக வேண்டும்.
வெளிர் நிறத்திலான ஆடைகள் அணிதல் பொருத்தமானதாகும்.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய சப்ரகமுவ மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடற்பிராந்தியங்களை பொறுத்தவரையில் புத்தளம் தொடக்கம் கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 முதல் 25 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM