சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா ? விபத்தா ? பாரிய சந்தேகம் எழுகிறது என்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Published By: Digital Desk 3

22 Feb, 2024 | 05:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம்  கொலையா? அல்லது விபத்தா? என்பதில் சந்தேகம் உள்ளது.குற்றப்புலனாய்வுத் திணைக்களம் துரிதகரமான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்.

சனத் நிஷாந்தவை போன்று அரசியல்வாதிகள் அனைவரும் இறக்க வேண்டும் என 3 பேரை கொண்டவர்கள் கருதுகிறார்கள் என  ஆளும் தரப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவுக்கான அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மரணம்  கொலையா? அல்லது  விபத்தா, என்பதில் பாரிய சந்தேகம் உள்ளது. இதனால் தான்  அவரது மனைவி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். ஆகவே இந்த முறைப்பாட்டை துரிதமாக விசாரணை செய்து உண்மையை நாட்டு  மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் விமர்சிப்பது தற்போது புதிய கலாச்சாரமாக காணப்படுகிறது. 225 பேரில் மூன்று தரப்பினரை கொண்டவர்கள்   முழு அரசியல் கட்டமைப்பையும் விமர்சிக்கிறார்கள். அரசியல் கலாசாரத்துக்கு எதிரான கருத்துக்களையும் குறிப்பிடுகிறார்கள்.

சனத் நிஷாந்த கௌரவமானவர், பண்பானர், மனிதாபிமானமிக்கவர், பாராளுமன்றத்தில் சிறந்த முறையில் செயற்பட்டார். அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவரது இறப்புக்கு வருகை தந்த பெருந்திரளான மக்கள் அந்த குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கினார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உயிருடன் இருக்கும் போதும் சமூக வலைத்தளங்கள் அவரை கடுமையாக விமர்சித்தன. அவர் உயிரிழந்த பின்னரும் கடுமையாக விமர்சிக்கின்றன. அவரை கழுதை என்று விமர்சித்ததுடன் புத்தளம் மாவட்ட மக்களையும் கழுதைகள் என்று விமர்சிக்கும் மனநிலையில் தான் ஊடகங்கள் இருந்தன.

சனத் நிஷாந்தவை போன்று பெரும்பாலான அரசியல்வாதிகள் இறக்க வேண்டும் என்று மூன்று பேரை கொண்டுள்ள அரசியல் தரப்பினர்கள் நினைக்கிறார்கள்.பொய்யான கருத்துக்களை குறிப்பிட்டு மக்களை தவறான வழிநடத்துகிறார்கள்.இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்கவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர்...

2025-01-15 11:32:54
news-image

ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில்...

2025-01-15 11:24:09
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-01-15 11:15:00
news-image

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்று காணாமல்...

2025-01-15 11:17:41
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜைகள்...

2025-01-15 11:13:51
news-image

தொடங்கொடையில் வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

2025-01-15 10:45:40
news-image

மதவாச்சி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்...

2025-01-15 11:16:45
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

2025-01-15 10:30:14
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் விபத்து ;...

2025-01-15 11:10:52
news-image

துர்நாற்றம் வீசும் பேர வாவியை சுத்தம்...

2025-01-15 09:59:06
news-image

யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!

2025-01-15 10:39:04
news-image

இன்றைய வானிலை

2025-01-15 06:15:45