மத்திய வங்கி சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் - டயனா கமகே

21 Feb, 2024 | 07:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக மத்திய வங்கியை சுயாதீனப்படுத்திக் கொடுக்கவில்லை.மத்திய வங்கியின் ஆளுநரின் செயற்பாடு முற்றிலும் தவறானது,ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என சுற்றாடல் துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானது.

மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக 'புதிய வங்கி சட்டம் ' இயற்றப்படவில்லை.

நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை.தன்னிச்சையான முறையில் வங்குரோத்து நிலையை அறிவித்தார்.

நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு என்பதை அவர் கவனத்திற் கொள்ளவில்லை.மத்திய வங்கி ஆளுநரின் தவறான தீர்மானத்தால் நாடு என்ற ரீதியில் மீண்டெழ முடியாமல் உள்ளது.

மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் தொழில் செய்யும் அனைவரின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும்.

நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போது மத்திய வங்கியின் ஆளுநர் நகைப்புக்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.ஆகவே மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23
news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04