அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
உயிரிழந்த பெண்ணை பல நாட்களாகக் காணவில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது .
அதன்படி, நேற்று திங்கட்கிழமை (19) பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அந்த பெண் வீட்டிலுள்ள நாற்காலியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் சிதைந்த நிலையில் துர்நாற்றம் வீசியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM