எம்மில் பலரும் ஆண்டுதோறும் தவறாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு, தங்களது வளர்ச்சியை சீராக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வர். வேறு சிலர் தங்களுடைய தன வரவை அதிகரிக்கும் நட்சத்திரத்திற்கான தெய்வ வழிபாட்டை மேற்கொண்டு தங்களது முன்னேற்றத்தை நிர்ணயித்துக் கொள்வர்.
ஜாதகத்தை நம்பாமல் கடுமையான உழைப்பையும், மனதில் தோன்றும் தருணத்தில் அன்னதானத்தையும் செய்து வாழ்க்கையில் முன்னேறுபவர்களும் இருக்கிறார்கள். அதே தருணத்தில் சிலர் குலதெய்வ வழிபாட்டையோ.. தன வரவை அள்ளித்தரும் நட்சத்திர சூட்சம வழிபாட்டையோ மேற்கொள்வதை காட்டிலும், காவல் தெய்வ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு முன்னேறுவர்.
சிலருக்கு இது ஆச்சரியத்தை தரலாம். ஆனால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் காவல் தெய்வ வழிபாடு.. முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் அள்ளித் தரும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பொதுவாக ஜாதகத்தில் கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் காவல் தெய்வ வழிபாடு எப்போதெல்லாம் மேற்கொள்கிறார்களோ... அப்போதெல்லாம் அந்த தருணத்திய நெருக்கடியிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் மீள்வர். லக்னத்திலிருந்து ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய திரிகோண ஸ்தானத்தில் ராகு பகவான் இருந்தாலோ அல்லது சூரியன், சனி ஆகிய கிரகங்கள் இணைவு பெற்றிருந்தாலோ சனிபகவான் லக்னத்துடனும், லக்னாதிபதியுடனும் இணைவு பெற்றிருந்தாலோ.. பார்வை பெற்றிருந்தாலோ.. சனி, சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் இணைவு பெற்றிருந்தாலோ... அவர்களுக்கு காவல் தெய்வ வழிபாடு பெரியளவில் அருள் பாலித்து அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
சனிபகவான் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும்.. சனி பகவான் கேந்திர ஸ்தானம் எனப்படும் லக்னத்திலிருந்து ஒன்று, நான்கு, ஏழு, பத்து ஆகிய இடங்களில் இருந்தாலும் காவல் தெய்வ வழிபாடு பேருதவி புரியும். ஏனெனில் நவகிரகங்களில் சனி பகவான் தான் காவல் தெய்வமாக அருள் பாலிக்கிறார் என எம்முடைய முன்னோர்கள் குறிப்பிடுவதுண்டு.
காவல் தெய்வம் என்பது குலதெய்வத்தின் காவல் தெய்வம், எல்லை தெய்வம், எல்லை கடவுள், காவல் தெய்வம்... என பல வகைகளில் நாம் வணங்கி வருகிறோம். மேலும் பதினெட்டாம் படி கருப்பர், மதுரை வீரன், சங்கிலி கருப்பன், அய்யனார், பாண்டி முனீஸ்வரர், எல்லை பிடாரி அம்மன், மகா முனி அம்மன் என ஏராளமான காவல் தெய்வங்கள் உள்ளன.
சனி பகவான் உங்களுடைய ஜாதகத்தில் ஆதிக்கம் பெற்றிருந்தால், நீங்கள் காவல் தெய்வ வழிபாட்டை முறையாகவும், தொடர்ச்சியாகவும் மேற்கொண்டால் வளர்ச்சி உறுதி என்பதை அனுபவத்தில் உணரலாம். மேலும் குலதெய்வ வழிபாடு எம்முடைய குலத்தை பேணி பாதுகாத்து ஓங்கி வளரச் செய்யும் என்றால்... காவல் தெய்வத்தை வழிபட தொடங்கினால், எம்முடைய வம்சம் தங்கு தடையின்றி மேம்பட்ட நிலையில் விருத்தியடையும்.
மேலும் காவல் தெய்வ வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டவர்கள் தங்களது எதிரிகளை வெற்றி கொண்டு முன்னேறுவதையும் அனுபவத்தில் காணலாம்.
உடனே எம்மில் பலரும் தங்களின் காவல் தெய்வத்தை குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் வழியாகவோ அல்லது சோதிட நிபுணர்கள் வழியாகவோ அல்லது இணையத்தின் வழியாகவோ அறிந்து கொண்டிருப்பர். ஆனால் எந்த கிழமைகளில் சென்று வழிபடுவது என தெரியாமல் தவிப்பர். பொதுவாக காவல் தெய்வ வழிபாட்டை சனிக்கிழமைகளில் மேற்கொள்வது தனிச்சிறப்பு.
அதே தருணத்தில் காவல் தெய்வம் பெண் தெய்வமாக இருந்தால், சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று கிழமைகளில் ஏதேனும் ஒரு கிழமையில் சென்று முறையாக பூஜித்து, மனமுருக பிரார்த்தித்து வழிபட வேண்டும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM