உடற்பயிற்சியாளரின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை!

19 Feb, 2024 | 01:05 PM
image

எப்பாவல பிரதேசத்தில் உயிரிழந்த உடற்பயிற்சியாளர் ஒருவரின் மரணம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்தவர் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 

கடந்த வாரம் சனிக்கிழமை (10) குறித்த உடற்பயயிற்சியாளர் தனது வீட்டில் வீழ்ந்து காணப்பட்டுள்ளார்.  இவரை அவரது இளைய சகோதர்  வைத்தியசாலையில் அனுமதித்த  பின்னர் அவர்  மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  கடந்த வியாழக்கிழமை  (15) அவர் உயிரிழந்துள்ளார். 

இவரது இழப்பைத் தாங்க முடியாத அவரது தந்தை விஷம் அருந்திய நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல்நிலை தேறி வருவதாக   வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், உடற்பயிற்சியாளர் மதுபானம் அருந்திவிட்டு வீட்டின் முன் வீழ்ந்து கிடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  எவ்வாறாயினும், இந்த மரணம் சந்தேகத்துக்கிடமாக உள்ளதால் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44
news-image

யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு...

2025-02-12 13:10:15
news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36
news-image

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-02-12 11:13:12