பாகிஸ்தான் தேர்தல் ஆணையாளர் இராஜினாமா

19 Feb, 2024 | 10:20 AM
image

பாகிஸ்­தானில் அண்­மையில் நடை­பெற்ற தேர்­தல்­களின் பெறு­பே­று­களை மோச­டி­யாக மாற்­று­வ­தற்கு தான் உத­வி­ய­தாக ஒப்­புக்­கொண்ட தேர்தல் ஆணை­யாளர் ஒருவர்  இரா­ஜி­னாமா செய்தார்.

ராவல்­பிண்டி பிராந்­திய தேர்­தல்கள் ஆணை­­யாளர் லியாகத் அலி சட்தா என்­ப­வரே இவ்­வாறு   சனிக்கிழமை  இரா­ஜி­னாமா செய்தார்.

பாகிஸ்­தானில் கடந்த 8 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் மற்றும் மாகாண சட்­ட­மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்கள் நடை­பெற்­றன.

'இத்­தேர்­தல்­களில்  வெற்­றி­யீட்­டிய சுயேச்சை வேட்­பா­ளர்கள் பல­ருக்குரிய வாக்குச் சீட்­டு­களில் போலி முத்­திரை குத்தி, அவர்­களை நாம் தோல்­வி­ய­டையச் செய்­தோம்' என செய்­தி­யா­ளர்­க­ளிடம் லியாகத் அலி கூறினார்.

ராவல்­பிண்டி பிராந்­தி­யத்தில் வெற்றி பெற்ற 14 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்  இவ்வாறு தோல்­வி­ய­டையச் செய்­யப்­பட்­டனர் என அவர் கூறினார்.

'70,000 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் முன்­னி­லையில் இருந்த ஒரு­வ­ரையும் நாம் தோல்­வி­ய­டையச் செய்தோம். இரவில் தோல்­வி­ய­டைந்­தி­ருந்த வேட்­பா­ளர்கள் காலையில் வெற்­றி­யா­ளர்­க­ளாக மாற்­றப்­பட்­டனர்' என அவர் கூறினார்.

சட்­ட­வி­ரோ­த­மான இந்த அனைத்து செயல்­க­ளுக்கும் தான் பொறுப்­பேற்­ப­தாக, ராவல்­பிண்­டியில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறிய லியாகத் அலி,  பாகிஸ்­தானின் தலைமை தேர்தல் ஆணை­யாளர் மற்றும் பிர­தம நீதி­ய­ரசர் ஆகி­யோ­ருக்கும் இதில் தொடர்­புள்­ள­தா­கவும் பர­ப­ரப்புக் குற்­றச்­சாட்டை சுமத்­தினார்.

தனது செய­லுக்­காக வருந்­து­வ­தாகக் கூறிய அவர், இந்­ந­ட­வ­டிக்­கை­யினால் தனக்கு மன உளைச்சல் ஏற்­பட்­ட­தா­கவும்  தன்னால் உறங்க முடி­யாமல் போன­தா­கவும் கூறினார்.

பொலி­ஸா­ரிடம் தான் சர­ண­ டை­வ­தாக கூறிய அவர், தனது குற்­றச்­செ­ய­லுக்­காக தனக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும் என்றார்.

 லியாகத் அலி சட்­தாவின் குற்­றச்­சாட்­டு­களை பாகிஸ்தான் தேர்­தல்கள் ஆணைக்­குழு நிரா­க­ரித்­துள்­ளது. பெறு­பே­று­களை மாற்­றி­ய­மைக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ரவு எதுவும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை என அவ்­வா­ணைக்­குழு கூறி­யுள்­ளது. எனினும், இக்­குற்­றச்­சாட்டு தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­படும் என அவ்­வா­ணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

மேற்­படி தேர்­தல்­களில் மோச­டிகள் இடம்­பெற்­ற­தாக இம்ரான் கானுக்கு ஆத­ர­வான சுயேச்சை வேட்­பா­ளர்கள் பலர் ஏற்­கெ­னவே குற்றம் சுமத்­தி­யி­ருந்­தனர்.

அதே­வேளை, சிந்து மாகாண சட்­ட­மன்­றத்­துக்­கான கராச்சி பிராந்­திய தொகு­தி­யொன்றில் வெற்றி யீட்­டி­ய­தாக அறி­விக்­கப்­பட்ட  ஜமாத் ஈ-இஸ்­லாமி கட்­சியின் தலை­வ­ரான ஹாபிஸ் நயீமுர் ரெஹ்மான், அத்­தொ­கு­தியில் 4 ஆவது இடம்­பெற்ற, இம்ரான் கான் சார்பு வேட்­பா­ளரே உண்­மை­யான வெற்­றி­யாளர் எனக் கூறி, தனது வெற்­றியை தான் ஏற்­கப்­போ­வ­தில்லை என அறி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு...

2025-01-25 17:34:32
news-image

மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர்...

2025-01-24 15:44:18
news-image

கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகையில் டிரம்பினை ஆபாசவார்த்தைகளால்...

2025-01-24 13:46:19
news-image

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை...

2025-01-24 12:35:08
news-image

'வாழ்நாள் அனுபவம்" டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு...

2025-01-24 11:44:55
news-image

சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா...

2025-01-24 10:52:02
news-image

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம்...

2025-01-23 15:58:49
news-image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து...

2025-01-23 15:40:30
news-image

'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்...

2025-01-23 12:42:12
news-image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்...

2025-01-23 12:07:33
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ...

2025-01-23 11:37:54
news-image

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-23 08:32:00