சிவனொளிபாத மலை யாத்திரைக்குப் பயணித்த வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கம்பஹாவிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேனும் மாத்தறையிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தும் இவ்விபத்தில் சிக்கியுள்ளன.
குறித்த விபத்து இன்று 18 ஆம் திகதி பிற்பகல் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை - மில்லகஹமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கினிகத்தேனை வைத்தியசாலையிலிருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வேன் முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் வேனும் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM