ஜேர்மன் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்றுக்கு தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்; பொலிஸார் குவிப்பு

Published By: Devika

11 Mar, 2017 | 04:46 PM
image

ஒன்றுக்கு மேற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனியின் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்று மூடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் எஸ்ஸன் நகரில் உள்ள ‘லிம்பெக்கர் ப்ளெட்ஸ்’ என்ற கட்டிடமே இவ்வாறு மூடப்பட்டது.

பொலிஸாருக்குக் கிடைத்த உறுதியான தகவலையடுத்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, கட்டிடத்தின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து கட்டிடத்தின் கட்டுப்பாட்டை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். இதனால், அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள நிலத்தடி ரயில் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும், குண்டு செயலிழப்பு வீரர்கள் பலரும் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்ற சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த கட்டிடம், எஸ்ஸன்ஸ் நகரின் பிரமாண்ட கட்டிடங்களுள் ஒன்று என்றும், அங்கு இரு நூற்றுக்கும் அதிகமான கடைகள் இயங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52