இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 700 பஸ்கள் ஏலத்தில்!

17 Feb, 2024 | 10:55 AM
image

சேவையில் ஈடுபடுத்த முடியாத 700 பஸ்களை  இந்த வருடம் ஏலத்தில் விட இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.      

இந்த பஸ்கள் அனைத்தும் பல வருடங்களாக இயங்க முடியாத நிலையிலிருப்பதாக  அந்த சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

கொழும்பு பிரதேசத்தில் இயங்க முடியாத நிலையில் 103  பஸ்கள் உள்ளதாகவும், அந்த பஸ்களின் பதிவை இரத்து செய்யுமாறு அறிக்கையொன்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிப்போக்களில் இருக்கும்  பஸ்களை  இரும்புக்காக ஏலம் விடவுள்ள நிலையில் அதில் கிடைக்கும் பணத்தில் புதிய பஸ்களை கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இலங்கை போக்குவரத்து சபையின் 5,300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் பஸ்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38
news-image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக...

2025-03-19 21:45:57
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று...

2025-03-19 21:39:13
news-image

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி அட்மிரல்...

2025-03-19 21:41:38
news-image

அரசாங்கம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற...

2025-03-19 17:19:08