2017ஆம் ஆண்டுக்கான வடக்கின் சமரில் யாழ். மத்திய கல்லூரி அணியை 7 ஓட்டங்களால் யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணி வெற்றிகொண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையில் நடைபெற்ற வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் 111 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்.மத்திய கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் 164 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணி 253 ஓட்டங்களைக் குவித்து 89 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி நேற்றைய இரண்டாம் நாளில் 82 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 7 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இதன்மூலம் 111 ஆவது வடக்கின் சமரில் யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணி அபார வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM