பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் கால்நடைப் பண்ணைக்குள் நுழைந்து பன்றியைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்த மூவர் கைது

Published By: Vishnu

14 Feb, 2024 | 06:53 AM
image

பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் கால்நடைப் பண்ணைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து சுமார் 150 கிலோ எடையுள்ள பன்றியைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்த மூவரை பேராதனை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (13) கைது செய்துள்ளனர்.

இப்பண்ணையில் இறைச்சிக்காகவும், விவசாய பீடத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகவும் வளர்க்கப்படும்  விலங்குகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான உட பேராதனை பிரதேசத்தில் இந்த மிருக பண்ணை அமைந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் திங்கட்கிழமை (12) இரவு பண்ணைக்குள் நுழைந்து, பன்றியை கொன்று அதன் உடல் பாகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 பண்ணையில் நன்கு வளர்ந்த பன்றி காணாமல் போனதாக பண்ணையின் முகாமையாளரால் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, உட பேராதனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அங்கு பன்றி இறைச்சி இருந்தத்கை அவதானித்திருந்தனர்.

 இதற்கு முன்னரும் பல தடவைகள் குறித்த பண்ணையில்  கோழிகள் காணாமல் போயுள்ளதுடன், இந்த விலங்குகள் திருடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 இப்பண்ணையில் இறைச்சிக்காகவும், விவசாய பீடத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகவும் விலங்குகள் வளர்க்கப்படுவதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 பேராதனை பொலிஸ் குற்றப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சுரேஷ் குமாரவின் பணிப்புரையின் பேரில், பேராதனை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்க,  ஆகியோர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-03-07 05:57:05
news-image

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான்...

2026-03-07 05:27:05
news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57