சுங்க பிரிவின் அனுமதியின்றி கொள்வனவு செய்யப்பட்ட 1500 இலட்சம் ரூபாய் பெறுமதி மிக்க ஆடைகள் பறிமுதல்

Published By: Vishnu

14 Feb, 2024 | 12:19 AM
image

(செ.சுபதர்ஷனி)

சுங்க பிரிவின் அனுமதியின்றி கொள்வனவு செய்யப்பட்ட 1500 இலட்சம் ரூபாய் பெறுமதி மிக்க ஆடைகள் இலங்கை சுங்கத்தின் சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்திருந்த சந்தேகத்துக்கிடமான 4 கொள்கலன்கள் ஒருகொடவத்தை பகுதியில் உள்ள சரக்குப் பொருள் ஏற்றி இறக்கும் முனையத்தில் சுங்கப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை (13) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

(படப்பிடிப்பு :எம். எஸ் சுரேந்திரன்)

இதன்போது கொள்கலன்களில் பிரபல நிறுவனம் ஒன்றிலிருந்து சுமார் 1,60,000 ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டு சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சரக்கின் உரிமையாளர் சுங்கத்திற்குச் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களில் துணிவகைகள் மாத்திரம் கொள்வனவு செய்வதற்காகத் தெரிவித்து ஆடைகளைக் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆடைகளின் பெறுமதி சுமார் 1500 இலட்சம் ரூபாய் என சுங்கப் பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இவை சந்தைக்கு விடுவிக்கப்பட்டிருந்தால் சுங்கப் பிரிவினருக்கு சுமார் 60 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் எனவும் சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு ஆடைகளைக் கொள்வனவு செய்த உரிமையாளர் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆடைகள் தொடர்பாகச் சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17
news-image

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை நாட்டுக்கு பயனளிக்கும்...

2025-01-21 19:47:28
news-image

ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஒற்றைத்தீர்வை உடனடியாக யாராலும்...

2025-01-21 22:42:17
news-image

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் சபையில்...

2025-01-21 22:34:09
news-image

மஹிந்தவின் வீட்டை அரசாங்கம் பெற்றுக்கொண்டால் அவருக்கு...

2025-01-21 17:47:47
news-image

சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின...

2025-01-21 15:51:54
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் உரிமை...

2025-01-21 17:31:09