அட்டலுகம சிறுமியை கொலை செய்தவருக்கு 27 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை

13 Feb, 2024 | 04:54 PM
image

களுத்துறை மாட்டத்தின் பண்டாரகம, அட்டலுகம பகுதியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு 27 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்க பாணந்துறை உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு 30 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கொலை சம்பவமானது கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி சிறுமி  தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற நிலையில் காணாமல் போனார். இதனையடுத்து, அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு வழங்கிய நிலையில் சிறுமி மறுநாள் (28) சேற்று நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

விசாரணையில் நபரொருவர் இந்த சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நிலையில்,  சிறுமி சத்தமிட்டதால் அஞ்சி குறித்த நபர் சிறுமியை சேற்று நிலத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்தது.

குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் தந்தையின் தோழர் எனவும் அவர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வரும் நபரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16