மீரிகம ஆதார வைத்தியசாலையின் சிறுவர்களுக்கான விடுதிப் பிரிவிற்குள் நிர்வாணமாக சென்ற நபரினால் குறித்த வைத்தியசாலையில் பதற்றமான நிலை ஏற்றபட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் சிறுவர்கள் பிரிவிற்குள் நிர்வாணமாக சென்ற சந்தேகநபர் ஒருவர் குறித்த பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 13 வயது சிறுமி ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த கட்டிலுக்கு அருகில் அமர்ந்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி உறக்கத்தில் இருந்து எழுந்த நிலையில் அவரது கட்டிலுக்கு அருகில் நிர்வாணமாக இருந்த சந்தேக நபரை கண்டு சத்தமிட்டு அலறியுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தத்தினால் சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் மீரிகம பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM