ஐ.எஸ்.ஸுக்கு எதிரான கூட்டுப் படைத் தாக்குதல்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்துப் பேச, 68 நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 22 மற்றும் 23ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், ஈராக் மற்றும் சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ்.ஸின் அரண்களை விரைவாக அழிப்பதற்காக மேற்படி 68 நாடுகளினதும் ஒத்துழைப்பு கோரப்படும் என்று தெரியவருகிறது.
மேலும், உலகின் சில பகுதிகளில் இயங்கும் ஐ.எஸ். இயக்கத்தின் கிளை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பு அமைப்புகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் என அந்த இயக்கத்தைப் பூண்டோடு அழிப்பதற்காக, உலகின் அனைத்து நாடுகளினது ஆதரவையும் பெற முயற்சியெடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டுப்படை அமைப்பின் இரண்டாவது கூட்டமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM