(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டை ஆட்சி செய்துவந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் பல வருடங்கள் அதிகாரத்தில் இருந்து நாட்டை அபிவிருத்தி செய்தததைவிட ரணில் விக்ரமசிங்க ஒன்றை வருடங்களில் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்பி, வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த தேவையான இலக்கை தயாரித்துள்ளார் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இரண்டாம் நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு வங்குரோத்து அடைந்தநிலையில் இருந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க, நாட்டை பாதுகாத்துக்கொண்டு, பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த பொறுப்பை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வராத நிலையில், ரணில் விக்ரமசிங்க முன்வந்து, இந்த பாரிய பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என கேட்டுக்கொண்டிருந்தார். என்றாலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டை வங்குரோத்து நிலையில் மீட்டதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
அத்துடன் நாடு சுதந்திரமடைந்தது முதல் நாட்டை பல தலைவர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். அவர்களில் 5, 10 வருடங்கள் ஆட்சி செய்த தலைவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அந்த தலைவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்தததைவிட ரணில் விக்ரமசிங்க ஒன்றை வருடங்களில் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்பி, வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி இலக்கை நோக்கி பயணிப்பதற்கு தேவையான இலக்கை தயாரித்துள்ளார். அதனால் நாங்கள் இதனை விமர்சித்துக்கொண்டிருக்காமல், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண மாற்று வழி இருக்குமானால் அவர்கள் அதனை முன்வைக்க முடியும்.
மேலும் நாடு இந்தளவு வீழ்ச்சியடைந்தமைக்கான பொறுப்பை, நாட்டை ஆட்சி செய்த அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியும் இந்த நாட்டில் பல அமைச்சுப்பொறுப்புக்களை வகித்துள்ளன. அவர்களும் இதன் பங்காளிகளாகும். தற்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முன்வைத்திருக்கும் வழியை சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பை ஏற்றுக்கொண்ட சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இந்த வழியில் செல்லாமல் வேறு வழி இல்லை.
அதனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு அரசியல் பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அந்த நடவடிக்கைகளை குழப்ப நடவடிக்கை எடுத்தால், அதனால் ஏற்படும் பாதிப்புக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டிவரும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM