இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10, 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு இன்று (07) பல்கலைக்கழக பிரதான சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தெரிவிக்கப்பட்டதாவது :
எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி 3 அமர்வுகளும், 11ஆம் திகதி 3 அமர்வுகளுமாக மொத்தம் 6 அமர்வுகள் பட்டமளிப்பு விழாவின்போது நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும், இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும், மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டம் பெறவுள்ளனர்.
இரண்டாம் நாளில் இடம்பெறவுள்ள நான்காவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தை சேர்ந்த 314 பட்டதாரிகளும், ஐந்தாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 350 பேரும், ஆறாவது அமர்வில் முகாமைத்துவ பீடங்களை சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 361 பேரும் பட்டங்கள் பெறவுள்ளனர்.
அதன் அடிப்படையில், இப்பட்டமளிப்பு விழாவின்போது மொத்தமாக 1441 உள்வாரி பட்டதாரிகளுக்கும், 711 வெளிவாரி பட்டதாரிகளுக்குமாக மொத்தம் 2152 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், இவ்விழா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலில், பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையிலும் இடம்பெறவுள்ளது.
பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதிகளாக United States Sri Lanka Fulbright Commission தலைவர் கலாநிதி பேட்ரிக் மெக்னமாறா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான சந்தன உடவத்த ஆகியோர் கலந்துகொண்டு பட்டமளிப்பு உரையினை ஆற்றவுள்ளனர்.
மேலும், தொழில்நுட்ப பீடத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக பேராசிரியரான பியசிறிக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்படவுள்ளது.
பல்கலைக்கழக ஊடக பிரிவின் நெறிப்படுத்தலில் இந்த பட்டமளிப்பு நிகழ்வு வரலாற்றில் முதல் தடவையாக பல்கலைக்கழகத்தின் இணையதளத்தினூடாக நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமை முக்கிய அம்சமாகும் என குறிப்பிடப்பட்டது.
மேலும், பட்டமளிப்பு விழா நேரலை நிகழ்வுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட இணையத்தள பக்கமும் ஊடக மாநாட்டின்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் இணைந்து பட்டமளிப்பு விழா குழு தலைவர் பேராசிரியர் எம்.பி.எம். இஸ்மாயில், பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர், ஊடக பிரிவு இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM