இசையில் முத்திரை பதிக்கும் மலையக  இசை கலைஞன் 

Published By: MD.Lucias

07 Jan, 2016 | 12:21 PM
image

இசைமயமாக மாறும் இவ்வுலகில் தனக்கென தனி முத்திரையை பதிக்கும் வகையில் மலையகத்தை சார்ந்த இசை கலைஞன் ரதீஸ் சீனிவாசகம் தற்போது பல பாடல்களை பாடி வருகிறார்.

2014 ஆண்டு வீரகேசரியின்  ஊடக அனுசரணையில் தனது முதலாவது ஆல்பம்  (album) இணை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பின்னர் "காதலா சாதலா", "கண்கள் ரெண்டில்" ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.

"வரம்" எனும் தனி பாடலை மிகவும் நேர்த்தியாக பாடி அனைவரது மனங்களையும் ஈர்த்திருந்தார்.தாயின் அன்பை சரியாக புரிந்துகொள்ளாமல் வாழும் அனைவருக்கும்  தாய் பாசத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த பாடல் அமைந்திருந்தது மேலும்  இப்பாடல் நம் சகோதர மொழியான சிங்கள மொழியிலும் மொழிப்பேர்க்கப்பட்டு ரதீஸ் இன் குரலில் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கானொளியுடன் வெளியிடப்படவுள்ளது.

இரு மொழிகளிலும் தன் பாடல் திறமையை மெருகூட்டும் பாடகன் ரதீஸ் சீனிவாசகம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right