இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயின் கூற்றை மறுக்கும் அமைச்சர் பந்துல!

Published By: Vishnu

06 Feb, 2024 | 11:14 PM
image

கஞ்சா செடியை வளர்ப்பதற்கும் கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியுள்ளதனை மறுத்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, கஞ்சா செடி பயிரிடுவதற்கான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது வேறு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் வாராந்த அமைச்சரவை  ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். 

டயனா கமகே அமைச்சரவை அமைச்சர் அல்ல. அவர் வெளியிட்ட அறிக்கைக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அமைச்சரவைக்கு எந்த அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை  என்றும் அவர் கூறினார். 

ஏற்றுமதிக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க டயனா கமகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34