புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பஸ்ஸின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு நேரத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அதிவேகமாக சென்ற குறித்த பஸ்ஸை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ள நிலையில் பஸ்ஸின் சாரதி பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாது அதிவேகமாக பஸ்ஸை செலுத்தியுள்ளார்.
பஸ்ஸை துரத்திச் சென்ற பொலிஸார், அதனை நிறுத்தி சோதனையிட்டபோது பொலிஸாரிடமிருந்த தமது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பறித்து கொலைமிரட்டல் விடுத்துத் தப்பிச் செல்ல தயாரானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரிபேவ பிரதேசத்தில் வசிக்கும் பஸ் சாரதி, வெயாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் பஸ் உரிமையாளர் , அதே பிரதேசத்தில் வசிக்கும் அவரது நண்பர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM