நாற்பது வயதிற்கு மேற்பட்ட லட்சம் நபரில் பத்து பேருக்கு பேஜெட் டிஸீஸ் எனப்படும் எலும்பு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்த முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் இதுவரை ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த பாதிப்பு மரபு வழி மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. எலும்பின் வளர்ச்சியின் போது ஏற்படும் சமச்சீரற்றத்தன்மை காரணமாக, ஆரோக்கியமற்ற முறையில் எலும்பு உருவாவதை இது குறிக்கிறது. இதனால் எலும்பு முறிவடைவதற்கும், சமநிலையற்ற எலும்பு உருவாவதற்கும் காரணமாகிறது.
சிலருக்கு அசாதாரணமான முறையில் எலும்பு வளர்ச்சியடைந்து இத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் உங்களின் உடலில் ஏற்படும் இயல்பான மறுசுழற்சியின் போது, புதிய எலும்பு திசு படிப்படியாக உருவாகி, பழைய எலும்பு திசுவினை மாற்றியமைக்கிறது.
இதனால் மண்டையோடு, இடுப்பு, கால், முதுகெலும்பு ஆகிய பகுதிகளிலுள்ள எலும்புகள் பலவீனமடைவதற்கும், அவை எதிர்பாராமல் முறிவதற்கும் காரணமாகிறது. இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், அவர்களுக்கு குணமாகும் காலகட்டம் அதிகம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
மூட்டு வலி, எலும்பில் வலி, தோலில் நிறமாற்றம், மூட்டுகள் வீக்கம், இடுப்பு வலி, முதுகெலும்பு பகுதியிலுள்ள நரம்புகளில் வீக்கம், வயிற்று வலி, மலச்சிக்கல், பசியின்மை காது கேளாமை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே எலும்பு மருத்துவ நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும்.
இதன் போது பிரத்யேக இரத்த பரிசோதனை, எக்ஸ் ரே, போன் ஸ்கேன் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். இந்த பரிசோதனைகளின் முடிவில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் வீரியத்தை துல்லியமாக அவதானிப்பர்.
பிரத்யேக மருந்தியல் சிகிச்சையின் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை அளிப்பர். பிறகு சத்திர சிகிச்சைகளின் மூலம் முறிவடைந்திருக்கும் எலும்பை சீராக்குவர். சிலருக்கு பாதிப்பட்டிற்கும் எலும்புகள், மூட்டுகளில் மாற்று சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவர். சிலருக்கு முதுகெலும்பு பகுதியிலுள்ள எலும்புளுடன் தொடர்புடைய நரம்புகளில் உண்டாகியிருக்கும் அழுத்தத்தை பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவர்.
டொக்டர் ராஜ்கண்ணா
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM