எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றுமொரு சந்தேக நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இவர் குறித்த இளைஞரை கடத்திச்செல்ல பயன்படுத்திய வேனுடன் எம்பிலிபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்டதையடுத்து நேற்று (4) மாலை எம்பிலிபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளைஞனை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்ட வேன், வாடகை வாகன சேவை நிலையம் ஒன்றிற்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM