அநுராதபுரத்தில் அதிகரித்துவரும் தெருநாய்கள்: கருத்தடை திட்டம் தொடர்கிறது!

05 Feb, 2024 | 11:17 AM
image

அனுராதபுர பகுதியில் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் சுமார் 5,000 தெருநாய்கள் இருப்பதாக அநுராதபுரம் மாநகர சபை தெரிவித்துள்ளது . 

இந்த பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்து காணப்படுவதற்கு பல காரணிகள் இருப்பதாக மாநகர சபையின் மாநகர கால்நடை வைத்திய அதிகாரி பிரதீப் நந்ததாச தெரிவித்துள்ளார். 

அதிக வெப்பம் காரணமாக ஆண்டுக்கு மூன்று முறை நாய்களின் இனப்பெருக்கம் செய்வதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் . 

நீர் வெறுப்பு நோய்  பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அநுராதபுரம் நகரசபையானது, மாநக ரசபை பகுதியிலும், மாநகரசபை எல்லைக்குள்ளும் தெருநாய்களுக்கு  கருத்தடை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு நிறுவனங்கள் அநுராதபுரம் மாநகரசபையுடன் இணைந்து செயற்படுகின்றன. 

அநுராதபுரம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில்  உள்ள தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுவதுடன்  தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு (2023) இந்த திட்டம் 40 நாட்களுக்கு செயல்படுத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் 40 நாட்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட்டவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் . 

அதன்படி இன்று  5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04