போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்கங்களை கொண்ட நிகழ்நிலை காப்பு சட்டம் 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், குறித்த சட்டத்தில் எவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்களாகின்றன, நடவடிக்கைகளை எடுப்பதற்கு யாருக்கு அதிகரங்கள் உள்ளன, தண்டனைகள் என்னவென்பதை பார்ப்போம்.
குற்றங்கள் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் சுகாதாரம் அல்லது பொதுமக்களின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும் சந்தர்ப்பம் குற்றமாகும்.
வெவ்வேறு மட்டங்களை சேர்ந்த நபர்களிடையே விரோதம் மற்றும் வெறுப்பு உணர்வுகளை ஊக்குவிக்கும் சந்தர்ப்பங்கள் என்பன தடை செய்யப்பட்ட கருத்துகளாகக் கொள்ளப்படுவதோடு அவ்விதமான செயற்பாடுகளில் ஈடுபவர்கள் குற்றங்கள் இழைத்தவர்களாக கருதப்படுவார்கள்.
நாட்டிற்குள் அல்லது நாட்டுக்கு வெளியில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும் நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளை விட அதிகரிக்காத சிறைத்தண்டனை அல்லது ஐந்து இலட்சம் ரூபாவை விட அதிகரிக்காத அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் இணைத்து விதிக்கப்படலாம்
பொய்யான கருத்துகளினால் கலவரத்தைத் தூண்டுதல், மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல், மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் அல்லது தீங்கிழைக்கும் நோக்கத்துடன் கருத்துகளை வெளியிடுதல் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இந்த இரண்டும் தண்டனைகளுக்கும் உரிய குற்றங்களாகக் கருதப்படும்
நீதிமன்றத்தை அவதூறு செய்யும் வகையிலான கருத்துகளை வெளியிடுதல், இணையத்தில் மோசடிகளில் ஈடுபடுதல் மற்றும் மற்றுமொருவரைப் போல நடித்து ஒன்லைன் மோசடியில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
கலகம் ஏற்படுத்த தூண்டும் நோக்குடன் அல்லது பொதுமக்களிடையே அச்சம், பீதியை தோற்றுவிக்கும் நோக்கத்துடன் கருத்துகளை வெளியிட்டு, அரசாங்கத்திற்கு எதிராகவோ, பொதுமக்கள் அமைதிக்கு எதிராகவோ குற்றம் செய்யத் தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிடும் நபருக்கு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டணைகளும் விதிக்கப்படும்
துன்புறுத்தல் தொடர்பான தகவல்களை பரிமாறுதல், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தவறொன்றை மேற்கொள்வதற்காக நாட்குறிப்பு தயாரித்தல் அல்லது மாற்றியமைத்தல் என்பன குற்றவியல் செயற்பாடாகும்.
நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம்
நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதோடு பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகவும், அதற்கான நியமனங்களை அரசியலமைப்பு பேரவையின் அனுமதி வழங்க வேண்டும் என்பதோடு ஜனாதிபதியே தலைவரை நியமிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட கருத்துகளாக ஆணைக்குழுவால் நிர்ணயிக்கப்பட்டவற்றை நீக்குமாறு, இணைய சேவை வழங்குநர்களுக்கும், இணைய இடையீட்டாளர்களுக்கும் பரிந்துரை செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இணையத்தள பயனர்களுக்கு சமூக ஊடக தளங்களை வழங்கும் இணையத்தளங்கள் குறித்த சட்டத்தின் கீழ் காணப்படும் விதிகளுக்கு அமைவாக பதிவு செய்யப்பட வேண்டும்.
தண்டனை
சமூக அமைதியைக் குலைத்தல், நபரின் தனிப்பட்ட கௌரவத்தை பாதிப்புறச்செய்தல் ஆகியவற்றுக்காக ஐந்து வருட கால சிறைதண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபா அபராதம், குற்றத்தை அடிப்படையாக கொண்டு சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும்.
சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் தண்டனைச் சட்டக்கோவைக்கு அமைவாக, 20 வருடகால சிறைத்தண்டனை,அபராதம் அல்லது சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும்.
ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அமைய வெளியிடப்படும் ஒழுங்குவிதிகளை தவிர்க்கின்றபோது, தண்டனை ஐந்து வருடகால சிறைதண்டனை அல்லது 10இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM