விவசாய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியான சம்பவம்: இருவருக்கு அம்பாறை நீதிமன்றினால் பிணை!

02 Feb, 2024 | 01:14 PM
image

உயர்தரப் பரீட்சையின் விவசாய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியான  சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரைப் பிணையில் விடுதலை செய்யுமாறு  அம்பாறை பிரதான நீதிவான் திருமதி நவோமி விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். 

தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு  சரீரப் பிணைகளில்  இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.   

சரீரப் பிணை வழங்குபவர்களில் ஒருவர் சந்தேக நபர்களின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்றும் அது உறுதிமொழி மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும்  நீதிவான் உத்தரவிட்டார்.  

சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்றும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தால்  பிணை இரத்துச் செய்யப்படும்  என்றும் உத்தரவிட்ட நீதிவான்  வழக்கு விசாரணை மே 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-06-16 06:07:20
news-image

“ இலங்கையின் மீட்பு பாதை -...

2025-06-15 20:11:07
news-image

சஜித் - நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக்...

2025-06-15 20:09:24
news-image

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? ; ...

2025-06-16 03:55:17
news-image

வவுனியா மாநகரசபையில் நாங்களே ஆட்சியமைப்போம் -...

2025-06-16 03:36:26
news-image

ஓட்டமாவடியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில்...

2025-06-16 03:37:24
news-image

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை இலங்கை...

2025-06-16 03:21:05
news-image

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது தெரிவு...

2025-06-16 02:57:36
news-image

கொழும்பில் ஆட்சியமைப்பது இலகுவானதல்ல ; இறுதிவரை...

2025-06-15 20:06:34
news-image

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க எந்தவொரு...

2025-06-15 18:33:56
news-image

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சு...

2025-06-15 23:25:35
news-image

எலிக்காய்ச்சலால் பரவல் தீவிரம்: பொதுமக்கள் அவதானத்துடன்...

2025-06-15 21:29:17