(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய பேருந்து கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும். அரசாங்கத்துக்கு 15 நாட்கள் காலவகாசம் வழங்குவோம். கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் எமது பலத்தை காண்பிப்போம் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுவதால் பேருந்து கட்டணத்தை தீர்மானிப்பதில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் போது பேருந்து கட்டணத்தை திருத்தம் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
அப்போது அரசாங்கம் பேருந்து கட்டண கொள்கையை முன்னிலைப்படுத்தி எமது கோரிக்கையை புறக்கணிக்கிறது.
ஒவ்வொரு மாதமும் எரிபொருள் கட்டணம் உயர்வடைகிறது. ஆனால் பேருந்து கட்டணம் வருடத்துக்கு இருமுறை தான் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.
வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு மத்தியில் வற் வரி அதிகரிப்பினால் வாகன உதிரிபாகங்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆகவே இம்முறை பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எரிபொருள் செலவுக்கு அமைய கட்டணத்தை திருத்தம் செய்யாவிட்டால் எம்மால் சேவையை தொடர முடியாது.
தற்போதைய எரிபொருள் விலைக்கு அமைய பேருந்து கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும்.
குறைந்தப்பட்ச கட்டணம் 35 ரூபாவாக காணப்பட வேண்டும். கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்து 15 நாட்கள் காலவகாசம் வழங்குவோம்.
இம்முறையும் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் எமது பலத்தை காண்பிப்போம். எம்மால் இனியும் கட்டண திருத்த கொள்கை என்ற வரையறைக்குள் இருந்துக் கொண்டு செயற்பட முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM