(நெவில் அன்தனி)
புளூம்பொன்டெய்ன் மங்குவாங் ஓவல் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்றின் முதலாம் குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை 214 ஓட்டங்களால் இந்தியா மிக இலகுவாக வெற்றிகொண்டது.
முஷீர் கான் குவித்த அபார சதம் உட்பட அவரது சகலதுறை ஆட்டம், ராஜ் லிம்பினி, சௌமி பாண்டே ஆகியோரது துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கின.
இந்த வெற்றியுடன் அரை இறுதியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை இந்தியா அதிகரித்துக்கொண்டுள்ளது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 295 ஓட்டங்களைக் குவித்தது.
மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது இந்தியாவின் முதலாவது விக்கெட் சரிந்தது.
ஆனால், அதன் பின்னர் முஷீர் கான் 2ஆவது விக்கெட்டில் ஆதர்ஷ் சிங்குடன் 77 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் உதய் சஹாரனுடன் 87 ஓட்டங்களையும் பகிர்ந்து இந்தியாவை பலமான நிலையில் இட்டார்.
ஆரம்ப வீரர் ஆதர்ஷ் சிங் 52 ஓட்டங்களையும் உதய் சஹாரன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய முஷீர் கான் 126 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 131 ஓட்டங்களைக் குவித்தார்.
பந்துவீச்சில் மேசன் க்ளார்க் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 28.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.
அணித் தலைவர் ஒஸ்கர் ஜெக்சன் (19), ஸக் கமிங் (16), அலெக்ஸ் தொம்சன் (12), ஜேம்ஸ் நெல்சன் (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சௌமி பாண்டே 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராஜ் லிம்பானி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஷீர் கான் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தியா தனது அடுத்த சுப்பர் 6 போட்டியில் நேபாளத்தை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி எதிர்த்தாடும்.
ஆட்ட நாயகன்:
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM