நிகழ்லை காப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்றத்தின் திருத்தங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதை சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்! - ஆஷு மாரசிங்க

Published By: Digital Desk 3

30 Jan, 2024 | 05:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (30)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச்ட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தது. அந்த திருத்தங்கள் அனைத்தும் அன்று சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட  பின்னர்  திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போது உள்வாங்கப்பட்டிருந்தன என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன்.

மேலும் பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படும்போது, இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்ததுடன், பாராளுமன்ற ச நடவடிக்கைகள் இடம்பெறும்போது அதனை அவதானிக்க அரச அதிகாரிகள் அமந்திருக்கும் அறைக்கு வந்து அங்கிருந்த சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் இது தொடர்பாக கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டே சென்றார். உயர் நீதிமன்றத்தின் திருத்தங்களை சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளபதாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர்நீதிமன்றம் முன்வைத்திருந்த திருத்தங்கள் அனைத்தும் முறையாக இடம்பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைபு திணைக்களம் என்பன அதனை உறுதிப்படுத்தியுள்ளன.

அதேநேரம் உயர் நீதிமன்றத்தின் திருத்தங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் ஆளும் கட்சி கூட்டத்துக்கு சென்று உறுதிப்படுத்தி இருந்தார்.

அவ்வாறான நிலையில் உயர் நீதிமன்றத்தின் திருத்தங்கள் சட்டமூலத்தில் உள்வாங்கப்படாததால், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டாம் என எதிர்க்கட்சிகள் சபாநாயகரை கோரியுள்ளதாக தேசிய பத்திரிகை ஒன்றில் வந்திருக்கும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புரம்பானது. அது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும்.

அத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டத்தையும் சபாநாயகர் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு வாரகாலத்துக்குள் அதனை சான்றுரைப்படுத்துவார். அதன் பிரகாரம் நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கும் சபாநாயகர் அடுதத பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் கைச்சாத்திட்டு சான்றுரைப்படுத்துவார். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13