சிசு மரணம் ; பெற்றோரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை

29 Jan, 2024 | 01:12 PM
image

குருணாகல் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 11 நாட்களே ஆன ஆண்  சிசுவின் பெற்றோரை கைது செய்ய குருணாகல் நீதவான்  நீதிமன்றம் குருணாகல்  பொலிஸாருக்கு உத்தரவிடுள்ளது . 

குறித்த சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிந்ததாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர் . 

குருணாகல் போதனா வைத்தியசாலையில் குழந்தையின்  பிரேத பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் குருணாகல் நீதவான்  நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது . 

குறைப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய், குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு யாரிடமும் கூறாமல் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையை விட்டுச் வெளியேறியுள்ளார். 

இதனையடுத்து உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்கள் தொடர்பான இரத்த மாதிரியை  பரிசோதனை செய்யுமாறு  குருணாகல் நீதவான்  நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது . 

குழந்தையின் பெற்றோர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்பதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த விடயம் குறித்து அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . 

பொல்கஹவெல கொடவெல பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியரே இந்த சிசுவின் பெற்றோர் என  சந்தேகிக்கப்படுவதாகவும், இந்த இளம் யுவதியே குழந்தையை பிரசவித்துள்ளதாகவும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர் . 

அவர்கள் வைத்தியசாலைக்கு  வழங்கிய  முகவரி போலியானது என பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்ததன் காரணமாக அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை குருணாகல்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-26 06:29:57
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47