மூதாட்டியின் மரணம் : 15 வயதான பேரன் பொலிஸாரால் கைது

29 Jan, 2024 | 11:21 AM
image

பெலியத்தை பகுதியில் மூதாட்டி ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்  அவரது பேரன் பெலியத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . 

கைது செய்யப்பட்டவர் 15 வயதுடைய  பாடசாலை மாணவன் எனவும் இவர் பாடசாலையின் மாணவ தலைவனாகவும் செயற்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர் . 

கடந்த 17ஆம் திகதி குறித்த மாணவனின் பாட்டி வீட்டில் உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பில் பேரன்  கிராம அதிகாரியிடம் தெரிவித்துள்ளார் . 

 கிராம அதிகாரியின் அறிவுறுத்தலின்படி பேரன் தனது பாட்டி இறந்து விட்டதாக பெலியத்தை பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார் . 

உயிரிழந்த மூதாட்டியின் இறுதிச்சடங்கு கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளது.  குறித்த பெண் உயிரிழப்பதற்கு   இரண்டு வாரங்களுக்கு முன்னர் அயல் வீட்டில் தங்க நகைகள்  திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. 

கடந்த 30 திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற  நிலையில் இது தொடர்பில் மூதாட்டியின் பேரனிடம்  பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்தனர் . 

பொலிஸாரின்   விசாரணையில் தானே தங்க நகைகளை திருடியாதாக பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டார் . 

மேலும் இவருடைய மூதாட்டியின் கழுத்தில்  இருந்த தங்க நகையையும் தான் திருடியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்திருத்தார் . 

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்  போது இவருடைய தகவலுக்கமைய அயல் வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் . 

இந்நிலையில் குறித்த மூதாட்டியின்   மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார் .   

இதனைதொடர்ந்து உயிரிழந்த மூதாட்டியின்  சடலம் இன்று திங்கட்கிழமை (29) தோண்டி எடுக்கப்படவுள்ளது . 

இந்த சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59
news-image

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி...

2026-08-08 09:17:29