மூதாட்டியின் மரணம் : 15 வயதான பேரன் பொலிஸாரால் கைது

29 Jan, 2024 | 11:21 AM
image

பெலியத்தை பகுதியில் மூதாட்டி ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்  அவரது பேரன் பெலியத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . 

கைது செய்யப்பட்டவர் 15 வயதுடைய  பாடசாலை மாணவன் எனவும் இவர் பாடசாலையின் மாணவ தலைவனாகவும் செயற்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர் . 

கடந்த 17ஆம் திகதி குறித்த மாணவனின் பாட்டி வீட்டில் உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பில் பேரன்  கிராம அதிகாரியிடம் தெரிவித்துள்ளார் . 

 கிராம அதிகாரியின் அறிவுறுத்தலின்படி பேரன் தனது பாட்டி இறந்து விட்டதாக பெலியத்தை பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார் . 

உயிரிழந்த மூதாட்டியின் இறுதிச்சடங்கு கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளது.  குறித்த பெண் உயிரிழப்பதற்கு   இரண்டு வாரங்களுக்கு முன்னர் அயல் வீட்டில் தங்க நகைகள்  திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. 

கடந்த 30 திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற  நிலையில் இது தொடர்பில் மூதாட்டியின் பேரனிடம்  பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்தனர் . 

பொலிஸாரின்   விசாரணையில் தானே தங்க நகைகளை திருடியாதாக பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டார் . 

மேலும் இவருடைய மூதாட்டியின் கழுத்தில்  இருந்த தங்க நகையையும் தான் திருடியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்திருத்தார் . 

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்  போது இவருடைய தகவலுக்கமைய அயல் வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் . 

இந்நிலையில் குறித்த மூதாட்டியின்   மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார் .   

இதனைதொடர்ந்து உயிரிழந்த மூதாட்டியின்  சடலம் இன்று திங்கட்கிழமை (29) தோண்டி எடுக்கப்படவுள்ளது . 

இந்த சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

2025-12-17 17:34:29
news-image

ஏறாவூரில் விடுதியில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில்...

2025-12-17 16:26:09
news-image

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை சார் முச்சக்கர...

2025-12-17 17:42:03
news-image

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி,...

2025-12-17 15:43:07
news-image

அனர்தகால உதவிகளை மக்களுக்கு சென்றடைவதை அரச...

2025-12-17 17:31:21
news-image

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமான நிகழ்வை...

2025-12-17 17:30:29
news-image

கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

2025-12-17 17:29:37
news-image

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

2025-12-17 17:18:26
news-image

கொத்மலை - ரம்பொடை பகுதியில் மீட்கப்பட்டது...

2025-12-17 17:28:57
news-image

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை நிர்வாகப்...

2025-12-17 17:11:28
news-image

அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன...

2025-12-17 17:01:21
news-image

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

2025-12-17 15:24:48