நிக்கவரெட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்ட திவுல்லேவ திகன்னேவ பகுதியில் காட்டு யானையொன்று மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நிக்கவரெட்டிய வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த காட்டு யானையானது சுமார் 8 அடி உயரம் உடையது எனவும் 30 வயதுடையது எனவும் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது காணியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டு நிக்கவரெட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த யானையின் உடல் நிக்கவரெட்டிய மிருக சிகிச்சைப் பிரிவின் வைத்தியரினால் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக நிக்கவரெட்டிய வனஜீவராசிகல் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM