லபுகம விபத்தில் தந்தை, மகன் பலி : தாய் ஆபத்தான நிலையில்! 

25 Jan, 2024 | 12:19 PM
image

புத்தளம் - ஆனமடுவ, லபுகம பகுதியில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இராணுவவீரரும் அவரது மகனும் உயிரிழந்துள்ள நிலையில் மனைவி படு காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

நவகத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஜீவக செனவிரத்ன என்ற இராணுவவீரரும்  10 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது இராணுவவீரர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆனமடுவ - நவகத்தேகம பிரதான வீதியில் லபுகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது அங்குள்ள விகாரைக்கு முன்பதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரப்பலகை ஏற்றிச்சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றள்ளது.

விபத்தில் காயமடைந்த இராணுவவீரரின் மனைவி சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11
news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09
news-image

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

2025-12-06 15:52:19
news-image

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும்...

2025-12-06 15:22:43
news-image

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க...

2025-12-06 15:19:56
news-image

டித்வா புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார்...

2025-12-06 13:56:32
news-image

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை...

2025-12-06 14:03:54
news-image

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

2025-12-06 13:08:58