(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சமூகவலைத்தலங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை தடுத்து அரசாங்கத்தின் இறுப்பை பாதுகாத்துக்கொள்ளும் துரும்பாகவே நிகழ்நிலை காப்புச்சட்டமூலத்தை அரசாங்கம் பயன்படுத்த முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற உத்ததேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சமூகவலைத்தலங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பாக வெளியிடப்படும் மோசமான விடயங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை கொண்டுவருவதாக அரசாஙகம் தெரிவிக்கிறது.
ஆனால் இதனை காரணம் காட்டிக்கொண்டு அரசாங்கத்தின் இறுப்பை பாதுகாத்துக்கொள்ள இந்த சட்டமூலத்தை அரசாங்கம் துரும்பாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவே எமக்கு தெரிகிறது.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பாக வெளியிடப்படும் மோசமான விடயங்களை தடுப்பதற்கு இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் சட்டமூலத்தில் உள்ள 57 பிரிவுகளில் 2 பிரிவுகளில் மாத்திரமே பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏனைய அனைத்து விடயங்களும் வலைத்தலங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் வலைத்தலங்கள் ஊடாக தகவல் பரிமாற்றிக்கொள்ளும் மத்தியில், அரசியல் நோக்கில் தங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வரும்போது அதனையும் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீண்ட கலந்துரையாடல் சென்றது.
அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் இன்று மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறது. அதனால் அரசாங்கத்துக்கு எதிராக சமூக வலைத்தலங்களில் எழும் விமர்சனங்களை அடக்குவதற்கான நடவடிக்கையாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். இது ஜனநாயக விரோத செயலாகும்.
அதேபோன்று அரசாங்கம் மக்கள் போராட்டத்துக்கு பயப்படுகிறது. அதனால் அவசரமாக இந்த சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருகிறது. இந்த சட்டமூலம் ஊடாக அரசாங்கம் பாதுகாக்கப்படுகிறது. அதனால்தான் நாங்கள் இதனை எதிர்க்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM