(நெவில் அன்தனி)
ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலக அணித் தலைவியாக பெயரிடப்பட்டுள்ளதன் மூலம் சமரி அத்தபத்துவுக்கு இரட்டைப் பெருமை கிடைத்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணிக்கு தலைவராக பெயரிடப்பட்டிருந்த சமரி அத்தபத்து ஒரு நாள் கழித்து ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த அணியில் அவுஸ்திரேலிய வீராங்கனைகளே அதிகளவில் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் முழுவதும் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சமரி அத்தபத்து அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தினார்.
நியூஸிலாந்துக்கு எதிரான தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில் சமரி அத்தபத்து 80 பந்துகளில் 140 ஓட்டங்களைக் குவித்த தனது அணியை வெற்றிபெறச் செய்திருந்தார். இதன் மூலம் நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை முதல் தடவையாக வெற்றியீட்டி வரலாறு படைத்தது.
அந்தத் தொடரில் அவர் இரண்டு சதங்களை விளாசியிருந்தார்.
மழையினால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷக்கு எதிரான தொடரிலும் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்த சமரி அத்தபத்து, அத் தொடரில் இலங்கை வெற்றிபெறுவதற்கு (1 - 0) உதவினார்.
கடந்த வருடம் 10 போட்டிகளில் 69.16 என்ற சராசரி, 125க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றுடன் சமரி அத்தபத்து 415 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அவரது இந்த ஆற்றல்கள் ஆரம்ப வீராங்கனைகளில் ஒருவராக அவரை உலக அணியில் பெயரிட வைத்துள்ளது.
ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி
ஃபோப் லிச்ஃபீல்ட் (அவுஸ்திரேலியா), சமரி அத்தபத்து (தலைவி - இலங்கை), எலிஸ் பெரி (அவுஸ்திரேலியா), அமேலியா கேர் (நியூஸிலாந்து), பெத் மூனி (விக்கெட் காப்பாளர் - அவுஸ்திரேலியா), நெட் சிவர் ப்றன்ட் (இங்கிலாந்து), ஏஷ;லி கார்ட்னர் (அவுஸ்திரேலியா), அனாபெல் சதர்லண்ட் (அவுஸ்திரேலியா), நாடின் டி க்ளார்க் (தென் ஆபிரிக்கா), லீ தஹுஹு (நியூஸிலாந்து), நஹிதா அக்தர் (பங்களாதேஷ்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM