உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு அமைய உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை நிறைவேற்ற ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அங்கீகரித்துள்ளது.
ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லலித் வர்ண குமார தலைமையில் திங்கட்கிழமை (22) பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கமைய குறித்த சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்காக செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக,ஜயந்த கெட்டகொட, சஞ்சீவ எதிரிமான்ன, ஜகத் சமரவிக்ரம ஆகியோருடன் குழுவின் தலைவருடைய அனுமதியுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து திருத்தங்களை முன்மொழிவதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும்,இது தொடர்பில் கொள்கை ரீதியான விடயங்கள் திருத்தங்களுக்கு உள்ளாக வேண்டி இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, இரான் விக்ரமரத்ன மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோர் சுட்டிக்காட்டினர். நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாது மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்படும் என்று குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM