இலங்கை அரசாங்கம் யுக்திய நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும் அது குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போதைப்பொருளிற்கு எதிரான கடுமையான பாதுகாப்பைநடவடிக்கைகளை அடிப்படையாக கொண்ட அணுகுமுறை குறித்து ஐக்கியநாடுகளின் நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அதிகாரிகள் உடனடியாக இந்த நடவடிக்கையை இடைநிறுத்தவேண்டும் மீளாய்வு செய்யவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட கொள்கைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும்எனவும் ஐநாநிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புறக்கணிக்கப்பட்ட சமூக பொருளாதார குழுக்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான போதைப்பொருள் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள ஐநாவின் மனித உரிமை நிபுணர்கள் கட்டாய இராணுவ புனர்வாழ்வு முகாம்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதையும் கண்டித்துள்ளனர்.
யுக்திய எனப்படும் நடவடிக்கையின் போது சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு எதிரான கடும் ஒடுக்குமுறை காணப்படும் காணப்படும் சூழமைவில் இது கவலையளிக்கின்றது என ஐக்கியநாடுகள் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM