மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: இருவர் கைது!

22 Jan, 2024 | 05:24 PM
image

புத்தளம் கல்லடி பகுதியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) யானையொன்று மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த நிலையில் புத்தளம் வனஜீவராசிகள்  பிரிவினர் மீட்டுள்ளனர் . 

குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலு கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரமுடைய 30 வயது மதிக்கத்தக்கதென வனஜீவராசிகள் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றத்தில் இன்று (22) முன்னிலைப் படுத்தப்பட்டனர்.

இதன்போது ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்த நிலையில் எதிர்வரும் 30 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றுமொருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதன்போது நிகவரெட்டிய மிருக வைத்திய சிகிச்சைப் பிரிவினர் இன்று நண்பகல் வருகத் தந்து உயிரிழந்த யானையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.  குறித்த யானை மின்சார வேலியில் சிக்கி  உயிரிழந்துள்ளதாக மிருக வைத்தியர் இசுரு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04