போராட்டத்தில் கலந்துகொண்ட 23 ஆயிரம் பேரையும் பதவி நீக்க முடியுமா ? - ஒன்றிணைந்த மின்சார சேவை சங்கம் கேள்வி

22 Jan, 2024 | 04:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 23 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். சேவையில் இருந்து இடைநிறுத்துவதாக இருந்தால் 23 ஆயிரம் பேரையும் இடைநிறுத்த முடியுமாவென ஒன்றிணைந்த மின்சார சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார சபையின் ஊழியர்கள் கடந்த 03,04 மற்றும் 05 ஆகிய தினங்களில் பகல் உணவு வேளையின் போது மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மின்சார சபையின் ஊழியர்களின் சகல விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் வகையில் மின்சார சபையின் மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர கடந்த  2024.01.02 ஆம் திகதி விசேட சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். 

இந்த சுற்றறிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சேவையாளர்களுக்கு எதிராக மின்சார சபை உள்ளக மட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டு மின்சார சபையின் 66 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபை தொழிற்சங்கத்தினர் நேற்று திங்கட்கிழமை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மின்சார சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டதாவது,

மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் மின்சார சபையின் சேவையாளர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

மின்சார சபை சேவையாளர்களின் வருமானம் மற்றும் அவர்களுக்கான இதர கொடுப்பனவு பற்றி மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அரசியல்வாதிகளின் ஊழல் மோசடியினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது. இதனை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது. அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் வெகுவிரைவில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

போராட்டத்தில் 23 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள் அனைவரையும் பதவி நீக்க முடியுமா, மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை முக்கியமான...

2025-01-26 13:38:14
news-image

மஹியங்கனை - கண்டி வீதியில் லொறி...

2025-01-26 12:12:23
news-image

கனடா பல்கலைக்கழக ஆய்வாளர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன்...

2025-01-26 12:29:59
news-image

சிலாபத்தில் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

2025-01-26 12:53:46
news-image

யாழ். செல்கிறார் ஜனாதிபதி அநுர

2025-01-26 12:32:28
news-image

அதானியின் காற்றாலை திட்டம் இரத்தாகாது ;...

2025-01-26 13:28:54
news-image

வாரியபொல பகுதியில் நீரில் மூழ்கிய இரு...

2025-01-26 11:24:26
news-image

இலங்கை வர ஆய்வுக் கப்பல்களுக்கு தடையில்லை;...

2025-01-26 12:58:44
news-image

வாழைச்சேனையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவர்...

2025-01-26 12:41:41
news-image

யோசித்த ராஜபக்ஷவை மகிந்தவின் மகன் என்பதற்காக...

2025-01-26 10:58:29
news-image

காலி இமதுவ பகுதியில் மூன்று பஸ்கள்...

2025-01-26 13:15:53
news-image

பெப்ரவரி 10 எமிரேட்ஸ் செல்கிறார் ஜனாதிபதி

2025-01-26 11:15:14