ஜேர்மனியில் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கான விதிகளை தளர்த்தும் புதிய சட்டத்திருத்தங்கள் அந்நாட்டுப் பாராளுமன்றத்தினால் கடந்தவாரம் அங்கீகரிக்கப்பட்டன.
புதிய சட்டத்திருத்தத்தின்படி, ஜேர்மனியில் சட்டபூர்வமாக 5 வருடங்கள் வசிப்போர் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இதுவரை 8 வருடங்களின் பின்னரே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியுமாக இருந்தது.
அதேவேளை, விசேட ஒருங்கிணைப்பு அடைவுமட்டங்களை பூர்த்தி செய்வோர் இதுவரை 6 வருடங்களில் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர். இக்காலவரம்பு தற்போது 3 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இரட்டைப் பிரஜாவுரிமை
அத்துடன் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்ஸர்லாந்தை தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜேர்மன் பிரஜாவுரிமையை பெறும்போது தமது முந்தைய நாட்டின் பிரஜாவுரிமையை கைவிட வேண்டியிருந்தது. சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது இவ்விதி தளர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் தம்பதிகளில் ஒருவர் சட்டபூர்வமாக 5 வருடங்கள் ஜேர்மனியில் வசித்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை கிடைக்கும்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மன் பாராளுமன்றத்தில் இச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 639 எம்.பிகள் ஆதரவாகவும் 234 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 23 பேர் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.
ஜேர்மனி சான்ஸ்லர் ஒலாவ் சோல்ஸின் சமூக ஜனநாயகக் கட்சி, சுதந்திர ஜனநாயகக் கட்சி மற்றும் கிறீன் கட்சி ஆகியன இணைந்த ஆளும் கூட்டணி இப்புதிய சட்டமூலத்துக்கு ஆதரவளித்தன.
பழைமைவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் கிறிஸ்தவ சமூக ஒன்றியக் கட்சி, ஜேர்மனிக்கான மாற்றுக் கட்சி ஆகியன எதிராக வாக்களித்தன.
இச்சட்டமூலம் அமுலுக்கு வருவதற்கு ஜனாதிபதி பிராங் வோல்ட்டர் ஸ்டேய்ன் மேயர் கையெழுத்திட வேண்டும்.
தொழிலாளர் பற்றாக்குறைக்கு மத்தியில், திறன்கொண்ட தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு இச்சட்டத்திருத்தங்கள் உதவும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி பயீசர் தெரிவித்துள்ளார்.
'உலகெங்கும் உள்ள தகுதியான மக்களுக்கு அமெரிக்கா, கனடாவைப் போன்று நாம் வாய்ப்பு வழங்க வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.
எனினும், இச்சட்டத்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிக் எதிர்ப்பு தெரிவித்துள்ன. இம்மாற்றங்கள் பிரஜாவுரிமையின் பெறுமதியைக் குறைக்க வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
விரைவான நாடு கடத்தல்
இதேவேளை, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக நாடுகடத்துவதற்கான சட்டத்திருத்தங்களுக்கும் ஜேர்மனி பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை அங்கீகாரம் அளித்தது
ஜேர்மனியில் வசிக்கும் 8.44 கோடி மக்களில் 1.2 கோடிக்கும் (14 சதவீதம்) அதிகமானோருக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை இல்லை எனவும், அவர்களில் 53 இலட்சம் பேர் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் ஜேர்மனியில் வசிக்கின்றனர் எனவும் ஜேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM