கிரிவட்டுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்பாக புதையல் தோண்டிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் கஹதுடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தொண்டுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இளம் தம்பதிகள் , பெண்ணின் சகோதரர் மற்றும் வெளிநாட்டவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதன்போது தண்ணீர் மோட்டார், மண்வெட்டிகள், இரும்பு கத்திகள் போன்ற பல உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது கிணறு தோண்டப் போவதாகக் இவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் புதையல் தோண்டிய இடத்தில் எட்டு அடி ஆழமும், 6 அடி அகலமும் தோண்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைதானவர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM