குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வதை விடுத்து யதார்த்­த­பூர்­வ­மான தீர்­வுக்கு முன்­வா­ருங்கள்

Published By: Vishnu

21 Jan, 2024 | 09:05 PM
image

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  தமி­ழி­னத்தின் சாபக்­கே­டாகும். இவர்கள் இருக்கும் வரை வடக்கு மற்றும்  கிழக்கு மாகாண  தமி­ழர்­க­ளுக்கு விமோ­சனம் கிடை­யது. நல்­லி­ணக்­கத்தை ஸ்தாபிப்­ப­தற்கு எடுக்கும் சகல முயற்­சி­க­ளுக்கும் இவர்கள் தடை­யாக உள்­ளார்கள்.  இலங்­கையில் சிங்­கள அரசு, தமிழ் அரசு என்று எது­வு­மில்லை. ஸ்ரீலங்கா அரசே  இலங்­கையில் உள்­ளது என்று  நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் உத்­தேச  பயங்­க­ர­வாத  எதிர்ப்பு சட்­ட­ மூ­லத்தை நீதி அமைச்சர்  சமர்ப்­பித்த பின்னர்  உரை­யாற்­று­கை­யி­லேயே இத்­த­கைய குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்தார். நீதி அமைச்­ச­ரது கருத்­தி­லி­ருந்து அர­சாங்­க­மா­னது  நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும்  சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்த  முனை­வ­தா­கவும் அதற்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை  என்­ப­தா­கவே   அமைந்­தி­ருக்­கின்­றது.

எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில்   தமிழ் மக்கள்  தமது  உரி­மைகள் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்­ப­தற்­காக  தொடர்ச்­சி­யாக போராடி வரு­கின்­றனர்.   நாடு  சுதந்­திரம்  பெற்­றதன் பின்னர்   தமிழ் மித­வாதத் தலை­வர்கள்   தமிழ் மக்­களின்  உரி­மைகள் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்­ப­தற்­காக  அஹிம்­சா­வ­ழியில் போரா­டி­னார்கள்.  சிங்­களத் தலை­வர்­க­ளுடன்  தமிழ்த் தலை­வர்கள் பல்­வேறு  ஒப்­பந்­தங்­க­ளையும்  உடன்­பா­டு­க­ளையும் கண்­டி­ருந்­தார்கள்.

 தந்தை செல்­வ­நா­யகம் காலத்தில்  பண்­டா–­செல்வா ஒப்­பந்தம், டட்லி– செல்வா ஒப்­பந்தம் என  பல்­வேறு இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டி­ருந்­தன. ஆனாலும்  அந்த இணக்­கப்­பா­டுகள் எதுவும் உரிய வகையில்  இது­வரை  நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.  அஹிம்­சா­வ­ழியில் போரா­டிய தமிழ்த் தலை­வர்கள்  தெற்கில்  தாக்­கு­தல்­க­ளுக்கும் உள்­ளாக்­கப்­பட்­டனர்.

இவ்­வாறு ஜன­நா­யக வழி­யி­லான போராட்­டங்கள் தெற்கின் அரச  தலை­வர்­க­ளினால் உதா­சீனம் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்தே  அநீ­திக்கு எதி­ராக  நீதி கோரி  தமிழ் இளை­ஞர்கள்  80களின் முற்­ப­கு­தியில் ஆயுதம் ஏந்­த­வேண்­டிய நிலைமை   உரு­வா­கி­யி­ருந்­தது..  

வடக்கு, கிழக்கில் விடு­த­லைப்­பு­லிகள்  பலம்­பெற்­றி­ருந்த காலப்­ப­கு­தியில்   பல்­வேறு பேச்­சு­வார்த்­தைகள்  நடத்­தப்­பட்­டன.   முன்னாள்  ஜனா­தி­ப­தி­க­ளான ரண­சிங்க பிரே­ம­தாச, சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க,  முன்னாள் பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரது ஆட்­சிக்­கா­லங்­களில்   விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

2001 ஆம் ஆண்டு  ஆட்­சிக்கு வந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான   அர­சாங்க காலத்தில் நோர்­வேயின் அனு­ச­ர­ணை­யுடன் யுத்த நிறுத்த ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்டு பேச்­சுக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  இதன் ஒரு கட்­ட­மாக  ஒஸ்லோ பிர­க­டனம் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்­தது. ஒரு­மித்த நாட்­டுக்குள் சமஷ்டி தீர்வை அடிப்­ப­டை­யாக ஏற்கும் வகை­யி­லேயே இந்த பிர­க­டனம் கைச்­சாத்­தா­னது.  ஆனாலும்   இத்­த­கைய  பேச்­சு­வார்த்­தை­களும் உரிய தீர்வை  வழங்­கி­யி­ருக்­க­வில்லை.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து   தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு   தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம்   வலி­யு­றுத்­தப்­பட்­டது.  ஆனாலும்  யுத்­தத்தை  வெற்­றி­கொண்ட  மம­தையில் அன்­றைய   ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ  தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுந்­திர முன்­னணி  அர­சாங்­க­மா­னது   பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு  முன்­வ­ர­வில்லை.  விடு­த­லைப்­பு­லி­களை அழித்த பின்னர்   பேச்­சுக்கள் அவ­சியம் இல்லை என்ற நிலைப்­பாட்டில் அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ செயற்­பட்டு வந்தார்.

 ஆனாலும் இந்­திய அர­சாங்­கத்தின் அழுத்தம் கார­ண­மாக  2011ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் 2012 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் வரையில்   அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளுக்கும்  தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுக்­கு­மி­டையில்  பேச்­சு­வார்த்தை    நடை­பெற்­றி­ருந்­தது.  16 சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் இதன்­போது இடம்­பெற்­றன. இந்த பேச்­சுக்­களில் பெரும் ஆர்­வத்­துடன் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் பங்­கேற்­றி­ருந்­தனர்.  இறுதி யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட  தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­களை தீர்ப்­பது தொடர்பில் இந்தப் பேச்­சுக்­களில் அதிக அக்­கறை  காண்­பிக்­கப்­பட்­டது.  

கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதிகள் தொடர்­பிலும்  காணா­மல்­போனோர் விவ­காரம்   குறித்தும்   புனர்­வாழ்வு நிலை­யங்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின்   விப­ரங்­களை வெளிப்­ப­டுத்­து­வது குறித்தும் இந்தப் பேச்­சுக்­களில் அக்­கறை காண்­பிக்­கப்­பட்­டது. இவ்­வி­ட­யங்­களில்  இணக்­கப்­பா­டுகள்  எட்­டப்­பட்ட போதிலும்   அந்த இணக்­கப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்த அன்­றைய அர­சாங்கம்   முன்­வ­ர­வில்லை.  இருந்தாலும்  பொறு­மை­யுடன்  தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்கள்   இந்தப் பேச்­சுக்­களில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர். பின்னர் அந்தப் பேச்­சு­வார்த்­தை­யி­லி­ருந்து அர­சாங்­கத்­த­ரப்­பா­னது வில­கிக்­கொண்­டது.

அன்றும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்கள்   தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணப்­பட வேண்டும் என்ற விட­யத்தில் அக்­க­றை­யு­டனும்  விட்­டுக்­கொ­டுப்­பு­டனும் செயற்­பட்­டி­ருந்த போதிலும்  அதனை  அர­சாங்கம்   கண்­டு­கொள்­ள­வில்லை.

இதன் பின்னர் 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம்  உரு­வா­ன­தை­ய­டுத்து அன்­றைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில்   அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான   நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.  இதன்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல்  தீர்வு தொடர்பில் பேச்­சு­வார்த்தை  நடத்­தப்­பட்டு   அந்த இணக்­கப்­பாடு புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட வேண்­டு­மென்று  தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யது. இதற்­கி­ணங்க  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் வழி­ ந­­டத்தல் குழு நிய­மிக்­கப்­பட்டு  அர­சியல் தீர்வு,  தேர்தல் முறை மாற்றம் , புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான விடயம்  என்­பன குறித்து  கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­து.

 இந்த  கலந்­து­ரை­யா­டல்­களின் போது  இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர்   பெரும் விட்­டுக்­கொ­டுப்­பு­டனும் சகிப்­புத்­தன்­மை­யு­டனும்  பேச்­சுக்­களில் ஈடு­பட்­டனர்.  ஒரு­மித்த நாட்­டுக்குள்   மாகா­ணங்­களின் அதி­காரம் மீளப்­பெற முடி­யாத வகை­யி­லான தீர்வை  பெற்­றுக்­கொள்ளும் வகையில் இணக்­கப்­பா­டு­களும்   எட்­டப்­பட்­டன.  இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது பல்­வேறு விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொண்ட போது  ஏனைய  அர­சி­யல்­கட்­சி­களின் தலை­வர்கள் அதனை கடு­மை­யாக  விமர்­சித்து வந்­தனர். ஆனாலும் அந்த விமர்­ச­னங்­க­ளையும் பொருட்­ப­டுத்­தாது சம்­பந்தன்  அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யதன்   அவ­சி­யத்தை உணர்ந்து  ஒத்­து­ழைப்­புக்­களை  வழங்­கி­யி­ருந்தார்.

2016ஆம் ஆண்டு தைப்­பொங்­க­லுக்கு முன் தீர்வு கிடைக்கும் என்று  அவர் நம்­பிக்கை  வெளி­யிட்டார். அதன் பின்னர்  தீபா­வ­ளிக்கு  முன்னர் தீர்வை பெற்று விட முடியும் என்று  அவர் கருத்து  வெளி­யிட்டார்.  இவ்­வாறு பெரும் நம்­பிக்­கை­யுடன் அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சியில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அன்று ஈடு­பட்­டி­ருந்­தது.  ஆனால்  தெற்கின் அர­சியல் சூழ்­நிலை கார­ண­மாக  அந்த முயற்­சியும் இடை­ந­டுவில்  கைவி­டப்­பட்­டது.

இதே­போன்றே தற்­போது ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின்  ஆட்­சி­யிலும்  இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில்  தமிழ் தேசி­யக்­கட்­சி­களின் தலை­மைகள்   அக்­கறை காட்டி வரு­கின்­றன.  கடந்த வருடம்   பெப்­ர­வரி மாதம் 4ஆம் திகதி 75 ஆவது சுதந்­திர தினத்தை இலங்கை கொண்­டா­டி­யது.  அந்தத் தினத்­துக்கு முன்னர் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வு­காண  சக­லரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என்று ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

இந்த அழைப்­புக்கு ஏற்ப தமிழ் தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்கள்  ஜனா­தி­பதி ரணி­லுடன் கலந்­து­ரை­யா­டினர்.  2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  நடை­பெற்ற சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்­திலும்  கடந்த வருடம் ஜன­வரி மாதம் இடம்­பெற்ற  சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்­திலும் தமிழ்த் தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்கள் பங்கேற்றிருந்தனர்.

13ஆவது திருத்தச் சட்டத்தையாவது  முழுமையாக நடைமுறைப்படுத்தி  பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிவகுக்கலாம்   என்ற எதிர்பார்ப்பு தமிழ்த்  தேசியக்கட்சிகளின் தலைமைகள் மத்தியில் காணப்பட்டது. ஆனால்  13ஆவது திருத்தச் சட்டத்தை கூட நடைமுறைப்படுத்த   முடியாத சூழல்  தொடர்ந்தும் நிலவி வருகின்றது.  அரசில் தீர்வு  காண்பதற்கு  தயார் என்று  ஜனாதிபதி கூறிவருகின்றார்.  அதற்கான நல்லிணக்க சமிக்ஞைகளை அவர்  காண்பித்து வருகின்றார்.     ஆனால் யதார்த்த ரீதியில்   அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.  இதுவரை காலமும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண  தமிழ் தேசியக்கூட்டமைப்பு  உட்பட தமிழ் தேசியக்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியே வந்துள்ளன. தற்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளன. ஆனால்  அதற்கான  சூழலை அரசாங்கம் உருவாக்கவேண்டும்.  இதனைவிடுத்து தமிழ்க் கட்சிகளின் தலைமை  மீது குற்றம்சாட்டிவிட்டு தப்பித்துக்கொள்ள அரச தரப்பு  முனையக்கூடாது  என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அரசியலமைப்பு செயற்பாட்டை விரைவுபடுத்த வேண்டியதன்...

2025-03-23 13:13:07
news-image

அரசியலமைப்பு விடயத்தில் காலம் கடத்தும் அரசாங்கத்தின்...

2025-02-09 15:10:34
news-image

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு...

2025-02-01 13:18:06
news-image

குற்றச் செயல்களின் பின்னணியும் கடந்தகால வரலாற்று...

2025-01-26 16:38:59
news-image

இந்தியாவின் வகிபாகத்தை பெறுவதற்கான வழி என்ன?

2025-01-19 15:02:55
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அவசியம்

2025-01-12 14:32:54
news-image

பொறுப்புக்கூறல் விடயத்தில் இனியும் இழுத்தடிப்பு வேண்டாம்

2025-01-05 15:33:27
news-image

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற...

2024-12-29 08:58:38
news-image

அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும்

2024-12-15 22:38:25
news-image

தமிழர்கள் மீதான அக்கறையை பின்தள்ளும் பூகோள...

2024-02-12 01:49:22
news-image

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­துவ போட்­டிக்கு முடிவு கட்ட...

2024-02-04 15:03:03
news-image

தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை...

2024-01-28 14:04:47