(நெவில் அன்தனி)
டயலொக் ஆசி ஆட்டா நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள தேசிய வலைபந்தாட்ட சுற்றுப் போட்டி வென்னப்புவை, அல்பட் எவ். பீரிஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20), ஞாயிற்றுக்கிழமை (21) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
இந்த வருட டயலொக் தேசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் யாழ். மாவட்ட வலைபந்தாட்ட சங்கம் மற்றும் மன்னார் மாவட்ட வலைபந்தாட்ட சங்கம் ஆகியவற்றின் அணிகள் பங்குபற்றவுள்ளன.
யாழ். மாவட்ட அணியில் முன்னாள் தேசிய வீராங்கனை சேதுகாவலர் எழிலேந்தினி, யாழ். மாவட்ட வலைபந்தாட்ட சங்கத் தலைவர் அபிதா உட்பட சிரேஷ்ட வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். இதன் காரணமாக கடந்த காலங்களை விட இந்த வருடம் யாழ். அணி பெரு முன்னேற்றதை வெளிப்படுத்தும் என நம்பப்படுகிறது.
மன்னார் மாவட்ட வலைபந்தாட்ட சங்கம் இரண்டு அணிகளைக் களம் இறக்கவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இவற்றுடன் மொத்தமாக 21 மாவட்ட வலைபந்தாட்ட சங்கங்களைச் சேர்ந்த 33 அணிகள் இம் முறை பங்குபற்றவுள்ளன. பல மாவட்டங்களிலிருந்து தலா 2 அணிகள் போட்டியிடவுள்ளன.
இந்த வருட தேசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நடப்பு சம்பியன் வர்த்தக வலைபந்தாட்ட சங்கம், கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற விமானப்படை வலைபந்தாட்ட சங்கம் ஆகியன உட்பட பலம் வாய்ந்த அணிகள் பங்குபற்றவுள்ளன.
அவற்றில் சமகால மற்றும் முன்னாள் தேசிய வீராங்கனைகள் பலர் இடம்பெறுவதால் இந்த வருட சுற்றுப் போட்டி மிகவும் விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுற்றுப் போட்டியில் சம்பியனாகும் அணி, இரண்டாம் இடத்தைப் பெறும் அணி ஆகியவற்றுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்படும்.
அத்துடன் அதிசிறந்த மத்திய கள வீராங்கனை, அதிசிறந்த கோல் தடுப்பு வீராங்னை, அதிசிறந்த கோல் போடும் வீராங்கனை, வலைபந்தாட்ட இராணி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு விசேட விருதுகள் வழங்கப்படும்.
இது இவ்வாறிருக்க, இந்த வருடம் சவூதி அரேபியாவில் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியை முன்னிட்டு 18 வீராங்கனைகளைக் கொண்ட குழாம் தேர்வுப் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் விக்டோரியா லக்ஷ்மி தெரிவித்தார்.
தேசிய வலைபந்தாட்டப் போட்டியில் இனங்காணப்படும் உயரமான அதிசிறந்த வீராங்கனைகளும் தேசிய குழாத்திற்குள் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
கனிஷ்ட வலைபந்தாட்டப் போட்டிகள் அடுத்த மாதம் நடத்தப்படும் எனவும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள கனிஷ்ட உலக மற்றும் ஆசிய வலைபந்தாட்டப் போட்டிகளுக்கு வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் பொருட்டு மாவட்டம் தோறும் தேர்வுகள் இடம்பெறும் எனவும் விக்டோரியா லக்ஷ்மி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM