ஜாதகத்தில் திசா, புத்தி நன்றாக இருந்தும், கோச்சாரத்தில் சுப கிரகங்கள் இணைவு பெற்று பார்வை இருந்தாலும், தொழிலில் அனுபவம் இருந்தாலும், சிறப்பான வேலையாட்கள் இருந்தாலும், நிலையான மற்றும் தற்காலிகமான வாடிக்கையாளர்கள் ஏராளமாக இருந்தாலும்... நாம் செய்துவரும் தொழிலில் லாபம் என்பது குறைவாகவே இருக்கும் அல்லது இந்த தொழிலை செய்து வருவதன் மூலம் எமக்கு கிடைக்கும் மன நிறைவு என்பது மிக மிக குறைவாகத்தான் இருக்கும். சேமிப்பு என்பது இல்லாதிருக்கும். இதற்கு காரணம், கர்ம வினைகள்தான். அதாவது நாம் எம்மையும் அறியாமல் எம்முடன் கொண்டுவரும் கர்மாக்கள் தான்.
இதனை களைவதற்கு ஒவ்வொரு சோதிட நிபுணர்களும் வெவ்வேறு வகையினதான பரிகாரங்களை பரிந்துரைப்பர். அவர்கள் எடுத்துரைக்கும் பரிகாரங்களை நம்பிக்கையுடன் மேற்கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட கால எல்லை வரை அந்த பரிகாரங்கள் பலனளிக்கக்கூடும். ஆனால் ஆயுள் முழுவதும் கர்ம வினைகளால் பாதிப்பு என்பது இருந்து கொண்டேதான் இருக்கும். இதனை களைவதற்கு எம்முடைய ஜோதிட நிபுணர்கள் கால பைரவ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கால பைரவர் என்பது காலத்தை நிர்ணயம் செய்பவர் என்பதால் இவரை எப்போது வேண்டுமானாலும் வணங்கலாம். வழிபடலாம். அதிலும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இவருக்கு கருநொச்சி மாலையை அணிவித்து வழிபட்டால், உங்களுடைய கர்ம வினைகள் முழுவதுமாக அகலும். இந்த கருநொச்சி மாலையை நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது ஆன்மீக பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களிலோ சொல்லி வைத்தால் அவர்கள் அதனை சேகரித்து தருவார்கள்.
இந்த கருநொச்சி மாலையை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று கால பைரவருக்கு அணிவித்து வழிபட்டால், கர்ம வினைகள் முழுவதும் அகன்று சுப பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.
இதனிடையே நீங்கள் செய்துவரும் தொழிலில் யாரேனும் தடையை ஏற்படுத்தினால் அல்லது மறைமுகமாக தடையை ஏற்படுத்தினால், நீங்கள் அருகில் உள்ள கால பைரவர் ஆலயத்துக்கோ அல்லது சன்னதிக்கோ சென்று, தேய்பிறை அஷ்டமி தினத்தன்று முழு பூசணிக்காயை இரண்டாக வெட்டி, நடுப்பகுதியை முழுவதுமாக தோண்டி எடுத்து, அந்தப் பகுதியில் நல்லெண்ணெய் அல்லது நெய்யை விட்டு காலபைரவர் வீற்றிருக்கும் திசை நோக்கி விளக்கேற்றினால், தொழிலில் இருந்த தடைகள் அகன்று, இலாபம் அதிகரிப்பதை கண்கூடாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM