புத்தளம் தமிழர் பகுதியில் இனந்தெரியாத விசமிகளினால் படகு மற்றும் வலைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் இரண்டு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவிற்குபட்ட ஆண்டிமுனைப் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத விசமிகளினால் செல்வநாதன் சொக்கலிங்கம் என்பவருக்குச் சொந்தமான படகு, இயந்திரம், 3 வள்ளங்கள் மற்றும் 4 வலைகளுக்குத் தீ வைத்துள்ளனர்.
இதனால் படகு, இயந்திரம், வள்ளம் முற்றாக தீக்கிரையுள்ளதாகவும் 3 வள்ளங்கள் பகுதியில் சேதமாகியுள்ளதாகவும் 4 வலைகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தீயிட்டு கொளுத்தப்பட்ட படகு, இயந்திரம், வள்ளங்கள் மற்றும் வலைகள் சுமார் 2 கோடி 15 இலட்சம் ரூபா பெறுமதியென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சம்பவம் உடப்பு ஆண்டிமுனைப் பகுதியில் இடம்பெற்றதில்லையெனவும் இதுவே முதல் தடவையெனவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒருமாத காலமாக தமிழருக்கும் சிங்களவர்களுக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் இதனால் குறித்த நாசகார வேலையை பெரும்பான்மையினர் செய்திருக்கலாமெனவும் சந்தேகிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் விசாராணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM