(செ.சுபதர்ஷனி)
இடைநிறுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளதோடு 23 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்ள உள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டிணைவு தெரிவித்துள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் கடந்த 11, 16 ஆம் திகதிகளில் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கொடுப்பனவு குறித்து சுகாதார அமைச்சர் மற்றும் நிதியமைச்சருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காத நிலையில் மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிசார் உரிமைகளுக்கு மறுப்பு தெரிவித்த சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 23 ஆம் திகதி ( செவ்வாய்க்கிழமை ) நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்கள் கூட்டிணைவின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்ற சுகாதாரத் தொழிற்சங்கங்களின் மத்திய குழுக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM