ஒருபுறம் கலைநிகழ்ச்சிகளை காண்பித்தவாறு மறுபுறம் திருகோணமலையின் சொத்துக்களை விற்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மற்றும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
18 சதவீத வற் வரிக்கு எதிராக மூதூரில் வியாழக்கிழமை (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது கருத்து வெளியிடுகையிலேயே அருண் ஹேமச்சந்திரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒருபுறம் பொங்கல் பண்டிகை, கலை நிகழ்ச்சிகள் என்று வெளி உலகுக்கு காண்பித்துக் கொண்டு மறுபுறத்தில் திருகோணமலையின் வளங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் இறங்கியிருக்கிறது.
இலங்கையில் பெறுமதிமிக்க வளங்களை கொண்ட மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கிறது.
ஆனால், இங்குள்ள சொத்துக்கள் குறைந்த விலைக்கு அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை திசைதிருப்பும் முகமாக பல்வேறு கொண்டாட்ட வைபவங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஆக, இவ்வாறு எமது வளங்களை அந்நியருக்கு தாரைவார்ப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM