களுத்துறையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி கற்கும் 6 பாடசாலைகள் இனங்காணப்பட்டன!

Published By: Digital Desk 3

18 Jan, 2024 | 11:20 AM
image

களுத்துறை பொலிஸ் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி கற்கும் ஆறு பாடசாலைகளை களுத்துறை புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது:

அடையாளம் காணப்பட்ட  பாடசாலைகளில் பிரபலமான  பாடசாலைகளும் அடங்கும். மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் ஈடுப்படுவதால் குறித்த பாடசாலைகளின்  நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என அவற்றின் அதிபர்கள்  மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது  பாடசாலை சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர். இந்த போதைப் பழக்கத்திலிருந்து  மாணவர்களை காப்பாற்ற விசேட விழிப்புணர்வு திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15
news-image

“Queen of the World -...

2025-05-16 18:56:18